150 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நிலக்கரி உலையின் கட்டுமானத்துக்கு இந்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. இந்த உலை, சுற்றுச்சூழலுக்கு கடும் விளைவை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹசீனா கூறுகையில், இந்த உலை சுந்தரவனக்காடுகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த உலை புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். அதனால், சுந்தரவனக் காடுகளை நம்பியுள்ள மக்கள் பயனடைவர் இது சுந்தரவனக் காடுகளுக்கு நன்மையாக அமையும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பேட்டியின்போது, பல்வேறு நாடுகளின் காடுகள் மற்றும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி மின்சார உலைகளின் புகைப்படங்களை அவர் சுட்டிக்காட்டினார்.