• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடியுடன் மெஹ்பூபா முப்தி சந்திப்பு
  2016-08-28 16:18:54  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி சனிக்கிழமை சந்தித்து, காஷ்மீரில் நிலவும் அமைதியற்ற நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முப்தி, இந்திய ஜனநாயகத்தில் தங்களது கனவுகளை நனவாக்க காஷ்மீர் மக்களுக்கு போதிய இடம் உள்ளது என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் ஆட்சி நடத்தும் விதம் வழிவிடுமாறு காஷ்மீர் இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

காஷ்மீரில் 5 சதவீத மக்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 95 சதவீத மக்கள், அமைதியான முறையில் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040