• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி உச்சி மாநாடு மற்றும் பொருட்காட்சி
  2016-08-30 09:12:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி உச்சி மாநாடு மற்றும் பொருட்காட்சி 29ஆம் நாள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான்-சீன நட்புறவு மையத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரிப் இந்நடவடிக்கையில் உரை நிகழ்த்துகையில், இந்த இடைவழியின் கட்டுமானம், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி, வட்டார அமைதி மற்றும் நிதானத்தைத் தூண்டுவதற்கு உதவி செய்யும் என்று தெரிவித்தார்.

இடைவழியின் கட்டுக்கோப்பின் கீழுள்ள பெரிய ரக எரியாற்றல் மற்றும் போக்குவரத்து வசதிகளின் கட்டுமானத் திட்டப்பணிகள், பாகிஸ்தானின் எரியாற்றல் நெருக்கடியைத் தணிவுபடுத்தி, அடிப்படை வசதிகள் கட்டுமானத்தை மேம்படுத்தி, எதிர்கால வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் ஷெரிப் தெரிவித்தார்.

தற்போது இடைவழி கட்டுமானம், பன்முக நடைமுறையாக்கக் காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்றும், சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்புக்கு ஓளிவீசும் எதிர்காலம் உண்டு. இரு தரப்பு ஒத்துழைப்பு இப்பிரதேசத்தின் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் சுன் வெய் துங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040