இந்தியத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பாரிக்கர் 29ஆம் நாள் 4 நாட்கள் நீடிக்கும் அமெரிக்கப் பயணத்தைத் துவங்கினார். பின்னணி சேவை பரிமாற்றக் குறிப்பாணையில் கையொப்பமிடுவது, அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த குறிப்பாணையின்படி, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர் தரப்பின் ராணுவ தளங்களைப் பயன்படுத்தும். இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது இரு தரப்பும் ஒத்த கருத்துக்கு வந்தன. இரு தரப்பும் ஒன்றுக்கொன்று ராணுவப் பிரிவுகளை அனுப்பாத முன்நிபந்தனையுடன், எதிர் தரப்பின் ராணுவ தளத்தில் சரக்குகளை ஏற்றியிறக்கல், சாதனப் பராமரிப்பு, ராணுவப் பணியாளர்கள் ஓய்வு முதலியவை மேற்கொள்ளப்படும்.
இந்தியத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பாரிக்கரின் அமெரிக்கப் பயணம், இந்திய-அமெரிக்க நெடுநோக்கு பேச்சுவார்த்தையில் முக்கிய பகுதியாகும் என்று இந்திய டைம்ஸ் எனும் செய்தியேடு தெரிவித்தது.