• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க-இந்திய பின்னணி சேவை பரிமாற்றக் குறிப்பாணை கையொப்பமிட்டது
  2016-08-30 10:50:19  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க மற்றும் இந்தியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகங்கள் 29ஆம் நாள் வாஷிங்டனில் பின்னணி சேவை பரிமாற்றக் குறிப்பாணையில் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டுள்ளன.

இக்குறிப்பாணையி்ன்படி, அமெரிக்க மற்றும் இந்தியப் படைப்பிரிவுகள் எதிர் தரப்பின் கடற்படை, தரைப்படை மற்றும் வான் படைத் தளங்களைப் பயன்படுத்தி, சரக்குகளை ஏற்றியிறக்கல், சாதனப் பராமரிப்பு, ராணுவப் பணியாளர்கள் ஓய்வு முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டரும், இந்தியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பாரிகரும் அன்று நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் இந்த குறிப்பாணை கையொப்பமிடப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இரு நாட்டுப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மேலும் பயன்தரும் முறையில் பின்னணி சேவைப் பணிகளை செய்வதற்கு இது துணை புரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040