• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-வியட்நாம் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
  2016-08-30 16:02:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவை உறுப்பினரும், தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான ட்சாங் வான்ச்சுவான், வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான நிகோ சுவன் லிசுடன் ஆகஸ்டு 30ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவும், வியட்நாமும் நல்ல அண்டை நாடுகளாகவும், நண்பர்களாகவும் திகழ்கின்றன. வியட்நாமுடன், இரு நாட்டுப் படைகளின் உயர் நிலை பரிமாற்றங்களையும், பல தரப்பு பாதுகாப்பு விவகாரத்துக்கான ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்தி, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் தீர்த்து, பிரதேச அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்கு ஆக்கமுடன் பங்காற்ற சீனா விரும்புவதாக ட்சாங் வான்ச்சுவான் தெரிவித்தார்.

இரு நாட்டுப் இராணுவ உறவு, இரு நாட்டுறவின் ஆதாரத்தூணாக மாற வேண்டும். இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று நிகோ சுவன் லிச் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040