• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாட்டின் மீது இந்தியாவின் கவனம்
  2016-08-30 18:30:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின் மீது, பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. இம்மாநாட்டை முன்னிட்டு, இந்திய தொலைக்காட்சி நிலையத்தின் மூத்த செய்தியாளர் மனு பன்வார் எமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், இந்திய ஊடகங்களின் கவனம் பற்றி விவரித்தார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தீர்மானங்கள் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி திசைக்கு மேலும் முக்கியமான பங்காற்றும். இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பல நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பது, எத்தகைய புதிய நடவடிக்கைகள் முன்வைக்கப்படுவது முதலியவை, இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாகும் என்று அவர் கூறினார்.

மேலும், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளைத் தவிர, இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல வளரும் நாடுகளை அழைப்பது இதுவே முதன்முறை. சீனா மேற்கொண்ட இந்த புதிய முயற்சிக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040