பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கையெழுத்தானது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்காரும், பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பிராஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஜீன ய்வேஸ் லே த்ரியனும் அன்று புதுதில்லியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
முதலாவது தொகுதி ரஃபேல் போர் விமானங்கள், 2019ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். வரும் 6 ஆண்டுகளுக்குள், அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.