இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 56ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, லீ க்கெச்சியாங் மேற்கொண்ட இந்த பயணம், சீன தலைமையமைச்சர் கியூபாவில் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும். இந்நிலையில் இப்பயணத்தின் மூலம் பாரம்பரிய நட்புறவை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்பை அதிகரித்து, மானிட பண்பாட்டுப் பரிமாற்றத்தை நெருக்கமாக்க விரும்புவதாக லீ க்கெச்சியாங் தெரிவித்தார்.