அதற்கு முன்பு, சந்தேகிக்கப்பட்டவரின் தெளிவில்லாத நிழற்படத்தை காவற்துறை வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், லத்தின் அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ஆண் என்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய காரணம் தெரியவில்லை என்றும் காவற்துறை அறிவித்துள்ளது.
23ஆம் நாளிரவு, பர்லிங்டன் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 4 பெண்களும் ஓர் ஆணும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.