சர்வதேச சுற்றுலா பயணிளின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரிக்கும் சுற்றுலா இடங்களின் உலகப் பட்டியலில், இலங்கை தலைநகர் கொழும்பு 4-வது இடத்தில் இருப்பதாக, சனிக்கிழமை வெளிவந்துள்ள 2016 மாஸ்டர்கார்டு உலகளாவிய சுற்றுலா நகரங்களின் குறியீடு எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு, கொழும்புவில் வெளிநாட்டு வருகையார்களின் எண்ணிக்கை 19.57 விழுக்காட்டாக உயரும் என இந்த குறியீடு கூறியுள்ளது. இத்துடன், இந்தப் பட்டியலில், ஜப்பானின் ஒசாகா, சீனாவின் செங்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி ஆகிய மூன்று நகரங்கள், முதல் மூன்று இடங்களில் உள்ளன.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், உலகளவில் மிக அதிகமாக வரவேற்கப்பட்ட இடம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.