சிரியா பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்பவை 25ஆம் நாள் அவசர வெளிப்படை கூட்டம் நடத்தியது. இதில் ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி லியூ ஜியேயீ கூறுகையில், சிரியாவின் குறிப்பிட்ட இடத்தில் மோதல் தீவிரமாகி வருவதால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிழப்பு குறித்தும், ஐ.நா. மனித நேய மீட்புதவி வாகன அணி மீதான தாக்குதல் குறித்தும், சீனா கவனம் செலுத்தி வருகிறது என்றும், இதற்கு வருத்தம் அடைவதோடு, தொடர்புடைய தரப்புகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சிரியா நிலைமை மேலும் சிக்கலாக மாறினால், அரசியல் தீர்வு முறையையும், ஐ.நாவின் இணக்க முயற்சியையும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.