ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற தலைப்பிலான சர்வதேச விவாதக் கூட்டம் 26ஆம் நாள் திங்கள்கிழமை சீனாவின் ஷி ஆன் நகரில் துவங்கியது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது வரை, இக்கட்டுமானத்தைக் கூட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில் சீனாவுக்கும் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் செழுமையாக வளரும் உயிராற்றல் நிறைந்து வருகிறது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் துணைத் தலைவர் ஹெ லீஃபெங் இந்த விவாதக் கூட்டத்தில் தெரிவித்தார்.