பாரிஸ் உடன்படிக்கையில் சேர இந்தியா அக்டோபர் 2ஆம் நாள் ஒப்புதல் அளிக்க உள்ளதற்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாகவும், இவ்வுடன்படிக்கை கூடியவிரைவில் அமலுக்கு வருவதற்கு இது முக்கிய ஆற்றலாகும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 26ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து காலநிலை மாற்ற பிரச்சினையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பாரிஸ் உடன்படிக்கையின் பயனுள்ள அமலாக்கத்தையும், உலகின் மாசற்ற தொடரவல்ல வளர்ச்சியையும் முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.