அணு ஆயுதங்களை பன்முகங்களிலும் தடுத்து அகற்ற வேண்டும் என சீனா எப்போதும் கருதுகிறது. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது, அணு ஆயுதம் இல்லாத நாடு மற்றும் பிரதேசத்தில் முன்நிபந்தனையின்றி பயன்படுத்தாது ஆகிய வாக்குறுதிகளையும் சீனா பின்பற்றுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்வாண்டு முழுமையான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு கையொப்பத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவாகும். இந்த ஒப்பந்தத்தின் கோட்பாடு மற்றும் இலக்கை சீனா உறுதியாக பேணிக்காத்து வருகிறது. பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பாடுபட்டு, அதன் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த சீனா விரும்புகிறது என்று அவர் கூறினார்.