2016 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான சீன தேசிய மனித உரிமை செயற்பாட்டுத் திட்டம் 29ஆம் நாள் வெளியிடப்பட்டது. வரும் 5 ஆண்டுகளில், மனித உரிமைக்கு மதிப்பளிப்பது, மனித உரிமையை பாதுகாத்து முன்னேற்றுவிப்பது ஆகியவை தொடர்பான இலக்குகள் மற்றும் கடமைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னுரை, பொருளாதாரம், சமூகம், பண்பாட்டு உரிமை, குடி மக்கள் உரிமை, அரசியல் உரிமை, குறிப்பிட்ட மக்களுக்கான உரிமை, மனித உரிமை கல்வி மற்றும் ஆய்வு, மனித உரிமை உடன்படிக்கைகளின் நடைமுறையாக்கம் சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு, நடைமுறையாக்கம் மற்றும் கண்காணிப்பு முதலியவை பற்றி இத்திட்டத்தில் விவரிக்கப்பட்டன.