காஷ்மீர் நிலைமை பற்றியும் பாகிஸ்தானின் நிலைப்பாடு பற்றியும் லியூ ச்சென்மின் கேட்டறிந்தார். காஷ்மீர் நிலைமை மீது சீனா கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. வரலாறு விட்டுச் சென்ற இப்பிரச்சினை, தொடர்புடைய தரப்புகளால் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தானும் இந்தியாவும் தொடர்பை வலுப்படுத்தி, கருத்துவேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, இருநாட்டுறவை மேம்படுத்தி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் கூறினார்.