• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலைவனத்தின் வனப்பும், மொகாவ் குகையின் கதையும்
  2016-10-14 17:16:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது கன்ஸு மாநிலம். சுற்றுலாவில் வேட்கை கொண்டவர்களை கன்ஸு ஏமாற்றாது. அந்த அளவிற்கு, இம்மாநிலத்தில் பல சுற்றுலாத்தளங்கள் பரந்து காணப்படுகின்றன.

அவற்றுள், ஜியாயூகுவான் நகரும், டுன்குவாங் நகரும் பிரதானமாக உள்ளன. மேற்குப்பகுதியிலான சீனப் பெருஞ்சுவரின் முதல் நுழைவாயில் ஜியாயுகுவானில் அமைந்துள்ளது. முந்தைய பட்டுப்பாதை வர்த்தகத்தில் முக்கிய நுழைவாயிலாக இது இடம் பெற்றிருந்தது.

டுன்குவாங் நகரில் பல அரிய, வரலாற்றுப் பூர்வமான இடங்கள் உள்ளன. பாடும் பாலைவனம் என அழைக்கப்படும் மிங் ஷா மலை பாலைவனம், யுனெஸ்கோவால் வரலாற்று மரபுச்சின்னம் என அங்கீகரிக்கப்பட்டுள்ள மொகாவ் குகைகள் ஆகிய இரு தளங்கள் மிக முக்கியமானவை.

மிங் ஷா பாலைவனத்தின் வனப்பு, அமைதியுடன் காணப்படும் அதன் முகடுகள், பாலைவனத்தின் மத்தியில் அமைந்துள்ள பிறைச் சந்திர வடிவ நீரூற்று உள்ளிட்ட இயற்கையின் விந்தைகளை நேரில் காண்பது பெரும் உவகையை மனதுக்குக் கொண்டு வரும்.

பல ஆண்டு வரலாற்றை மௌனமாக நவிழும், மலையின் பக்கவாட்டில் செதுக்கப்பட்டுள்ள 492 புத்தர் குகைகள் (மொகாவ் கூ), ஆண்டுகள் பல கடந்தும் செழிப்பான அதன் தோற்றம், அரசின் பராமரிப்பு, மிங் வம்சத்தில் முதல் குகை செதுக்கப்பட்டது முதல் மற்ற குகைகளின் உருவாக்கம் உள்ளிட்ட தகவல்கள் அறிய வேண்டியவைகளில் ஒன்று.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040