ஆப்கானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள நேட்டோவின் இராணுவத் தளத்துக்கு அருகில் அமெரிக்காவைச் சேர்ந்த படையினர் ஒருவரும் சாதாரண நபர் ஒருவரும் 19ஆம் நாள் தாக்குதலில் உயிரிழந்தனர். அமெரிக்க படையினர் ஒருவரும் அமெரிக்கர் இருவரும் இத்தாக்குதலில் காயமடைந்தனர் என்று ஆப்கானிலுள்ள நேட்டோ படை அன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் நடத்திய நபர் ஆப்கான் பாதுகாப்பு படையின் சீருடையை அணிந்திருந்தார். அவர் கொல்லப்பட்டார். ஆனால், அவரது அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. தற்போது காவற்துறை இச்சம்பவம் குறித்து புலனாய்வு மேற்கொண்டு வருகிறது என்று உள்ளூர் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.