2016ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாடு 20ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலகளவில் இயந்திர மனிதர் துறையின் உச்ச நிலை நிபுணர்களும், இயந்திர மனிதர் தொடர்பான தயாரிப்புகளும் இம்மாநாட்டில் ஒன்றுகூடியுள்ளனர்.
இயந்திர மனிதர் கருத்தரங்கு மற்றும் சிறப்பு தொழில் சார் கருத்தரங்கு, இயந்திர மனிதர் பொருட்காட்சி, இயந்திர மனிதர் போட்டி ஆகிய 3 பகுதிகள், 25ஆம் நாள் வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இடம்பெறுகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான நிபுணர்களும் தொழில் முனைவோர்களும் இதில் கலந்து கொண்டு, பரிமாற்றம் மற்றும் விவாதத்தை மேற்கொள்ள உள்ளனர். இயந்திர மனிதர் போட்டியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான குழுக்கள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.