சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் சாங் தேஜியாங் 20ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் டுட்டர்டே, அல்பேனிய நாடாளுமன்றத் தலைவர் இலிர் மேடா ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்தார்.
டுட்டர்டேவுடன் உரையாடிய போது, பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றத்துடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று சாங் தேஜியாங் கூறினார்.
மேடாவுடன் பேசிய போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம், சீனாவுக்கும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் வாய்ப்புகளை அல்பேனியா பயன்படுத்தி, சீனா-அல்பேனியா இடையே சீரான அரசியல் உறவை நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பின் கனிகளாக மாற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.