இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியின் கிழக்கிலுள்ள லடாக்கில் சீனாவும் இந்தியாவும் 19ஆம் நாள் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தின. ஒரு நாள் நடைபெற்ற இந்த இராணுவப் பயிற்சியில், இந்திய எல்லை பகுதியிலுள்ள கிராமப்புறத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தால், மனித நேய உதவி மற்றும் மீட்புதவி எப்படி மேற்கொள்வது என ஒத்திகை பார்க்கப்பட்டது.
இந்தப் பயிற்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அது, மீட்பு பணியை விரிவாக்கிய அதேவேளை, இருநாட்டு படைகளின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு நிலையையும் உயர்த்தியுள்ளது என்று இந்திய படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.