• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்து முன்னாள் அரசுத் தலைவருக்கு 20 ஆண்டுக்கால சிறை தண்டனை
  2016-10-23 14:27:18  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு அரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே ஆர்பாட்டம் நடத்தியவர்களை சட்டத்துக்குப் புறம்பாக காவலில் வைத்து, அவர்கள் மீது வன்முறை அடக்கு செயல்களைப் பயன்படுத்தியதால், எகிப்து முன்னாள் அரசுத் தலைவர் முகமது முர்சிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக எகிப்து உச்ச நீதி மன்றம் 22ஆம் நாள் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து உச்ச நீதி மன்றம், முர்சி தொடர்பான வழக்கு குறித்து முதன்முறையாக இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எகிப்து பொது மக்கள் அரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே ஆர்பாட்டம் நடத்தினர். நவம்பர் திங்கள் பிற்பகுதியில் வெளியிடபட்ட புதிய அரசியல் அமைப்பு சட்ட அறிக்கையை நீக்கி, புதிய அரசியல் அமைப்பு சட்ட வரைவு பற்றிய பொது வாக்கெடுப்பை ஒத்திப்போட வேண்டும் என்று அவர்கள் முர்சிக்குக் கோரிக்கை விடுத்தனர். சிலர் முர்சி பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கோரினர். இதனால் முர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே பெருமளவு சர்ச்சை மூண்டது. இச்சண்டையில் 10 பேர் உயிரிழந்தனர். 700க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040