• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவின் அலெப்போவில் மீண்டும் மூண்ட சர்ச்சை
  2016-10-23 15:47:40  cri எழுத்தின் அளவு:  A A A   

3 நாட்கள் நீடித்த "மனித நேய போர் நிறுத்தம்" முடிவுக்கு வந்த பிறகு, சிரியா அரசுப் படையும், அரசுக்கு எதிரான பல ஆயுதப்படைகளும் 22ஆம் நாள் சிரியாவின் வட பகுதியில் உள்ள அலெப்போ நகரில் மீண்டும் தீவிரச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

அரசு எதிர்ப்பு ஆயுதப் படைகளும், தீவிரவாத அமைப்பும் கைப்பற்றிய அலெப்போ நகரின் கிழக்குப் பிரதசேத்தில் சண்டை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்தன. சாலாஹெதின் பிரதேசத்தில், விமானத்தின் ஆதரவுடன், சிரியா அரசுப் படையின் ராணுவம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சிரியாவின் செய்தி ஊடகம் தெரிவித்தது.

"மனித நேய போர் நிறுத்தம்" நடைமுறைக்கு வந்த போது, அஹ்ரார் அல் ஷாம் எனும் அரசு எதிர்ப்பு ஆயுதப் படையைச் சேர்ந்த 7 ஆயுததாரிகள் மட்டுமே அரசுப் படையிடம் சரணடைந்தனர். தவிர, சிறிதளவு அப்பாவி மக்கள் அலெப்போவின் கிழக்குப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ளனர் என்று சிரியா அரசுப் படை அலுவலர் ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040