இந்தியாவுக்கான சீன தூதர் ரோ சாவ் ஹுய் 24ஆம் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று, தலைமைப் பதிப்பாசிரியர் ராஜ் கமல்ஜா, நாடுகளின் விவகாரங்கள் பற்றிய பதிப்பாசிரியர், தில்லி பிரதேச பதிப்பாசிரியர் ஆகிய சில உயர் நிலை பதிப்பாசிரியர்களுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டார். சீன-இந்திய உறவு, மனித தொடர்பு பரிமாற்றம், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சர்வதேச பிரதேச நிலைமை ஆகியவை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
ரோ சாவ் ஹுயின் பயணத்துக்கு ராஜ் கமல்ஜா நன்றி தெரிவித்தார். இரு தரப்புகளுக்கிடையிலான புரிந்துணர்வை ஆழமாக்குவதற்கு இது துணை புரியும். மேலும் புறநிலையாக சீன-இந்திய உறவு பற்றி அறிவிக்கும் என்னும் சீன செய்தி துறையுடனான பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.