2009ஆம் ஆண்டு தொடங்கி, சீனாவில் திபெத்தின் உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை பாதுகாப்புக்கான தடைகளின் காப்பு மற்றும் கட்டுமானத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, சில முக்கிய செயற்திட்டங்கள் தெளிவான பயன் பெற்றுள்ளன. பீடபூமியிலுள்ள உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையின் கட்டமைப்பு, ஒட்டுமொத்த நிலையில் நிதானமாகி வருகிறது. உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை பாதுகாப்புத் தடைகளின் செயல்பாடு தொடர்ந்து சீராகி வருகிறது என்று சீன அரசவை செய்தி அலுவலகம் 26ஆம் நாள் வெளியிட்ட ஒரு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.