திபெத் மரபுவழி பௌத்த மத திருமறையை விளக்கும் பணிக்கான 2016ஆம் ஆண்டு ஆய்வுக் கூட்டம் 7ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சீன திபெத்தியல் ஆய்வு மையத்தில் துவங்கியது. சீன பௌத்த மத சங்கத்தின் துணைத் தலைவர் பான்சென் எர்டேனி கொய்கி கியாய்பொ மற்றும் பிற மத குருமார்களும், திபெத் பௌத்த மத ஆய்வு துறையின் நிபுணர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
திபெத் மரபுவழி பௌத்த மதமும் இணக்க சிந்தனையும் என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், திபெத் மரபுவழி பௌத்த மத திருமறையிலுள்ள இணக்க சிந்தனையைத் தொகுத்து பரவல் செய்வது பற்றியும், இத்திருமறையை செவ்வனே விளக்கிக் கூறுவது பற்றியும் அவர்கள் விவாதம் நடத்த உள்ளனர்.