• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் வேளாண் துறை கணக்கெடுப்பு
  2016-12-02 09:12:08  cri எழுத்தின் அளவு:  A A A   
3ஆவது தேசிய வேளாண் துறை கணக்கெடுப்பு பற்றிய தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி கூட்டம் 1ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் துணைத் தலைமை அமைச்சரும் இக்கணக்கெடுப்புக்கான தலைமைக் குழுத் தலைவருமான வாங் யாங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். விவசாயம், கிராமப்புறம் மற்றும் விவசாயிகளின் அடிப்படை நிலைமை பற்றி பன்முகங்களிலும் அறிந்து கொண்டு, தொடர்புடைய கொள்கையை அறிவியல் முறையில் வகுப்பதற்கு வேளாண் துறை கணக்கெடுப்பு முக்கியமான அடிப்படை பணியாக விளங்குகிறது. 3ஆவது முறை தேசிய வேளாண் துறை கணக்கெடுப்பு சீராக மேற்கொண்டு, வேளாண்மை மற்றும் கிராமப்புறத்தின் வளர்ச்சிக்கு வலிமைமிக்க தரவுகளின் ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இக்கணக்கெடுப்பு பணிக்கான புலன் விசாரணை மற்றும் பதிவு 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் முழுமையாகத் தொடங்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040