ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால், பிரிட்டன் உலக அரங்கிலிருந்து விடுபட போவதில்லை என்றும், ஏற்கனவேயுள்ள சர்வதேச ஒழுங்கைப் பேணிகாப்பதில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன் 2ஆம் நாள் தெரிவித்தார்.
அன்று லண்டனில் உள்ள சாதாம் மாளிகையில் தூதாண்மை கொள்கை குறித்து சொற்பொழிவு நிகழ்த்திய போது அவர் இதைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகு, உலக அரங்கில் பிரிட்டன் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்றும், நட்புறவு, தாராள வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவை உருவாக்கி, உலகத் தன்மையுடைய தூதாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆயத்தம் செய்யும் போது, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் தூதாண்மை கொள்கையைத் தடுக்காமல், நேட்டோவில் உள்ள கடமையை பிரிட்டன் ஆக்கப்பூக்வமாக நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.