• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் நிதித்துறை வழிகள் பற்றிய கூட்டம்
  2016-12-03 15:47:41  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் நிதி வழிகள் பற்றிய முதலாவது கூட்டமும், தொடர்புடைய விவாதக் கூட்டங்களும் 2ஆம் நாள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நிறைவடைந்தன. உலகப் பொருளாதாரத்தின் விடா முயற்சியின் உறுதித் தன்மையை வலுப்படுத்துவது, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவது, டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பது ஆகியவை அடுத்த ஆண்டுக்கான முக்கிய பணிகளாகும் என கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா விளங்கிய போது மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஜெர்மன் நிதித்துறை அமைச்சர் சோயிபுலே இக்கூட்டத்தில் பாராட்டினார். நடப்புத் திங்கள் துவக்கத்தில், ஜெர்மனி சீனாவுக்குப் பதிலாக 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக பதவி ஏற்கின்றது.

20 நாடுகள் குழுவின் ஹாங்சோ உச்சி மாநாட்டில் இணக்க வளர்ச்சி பற்றி வலியுறுத்தப்பட்டு, உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டு வளர்ச்சி போக்கு சாராம்ச ரீதியாக முன்னேற்றப்பட்டுள்ளது என்றும், இவ்வுச்சி மாநாட்டின் சாதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சீனத் துணை நிதித்துறை அமைச்சர் சூ குவாங் யாவ் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040