"வளர்ச்சி உரிமை அறிக்கை" ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 30ஆவது ஆண்டு நிறைவு பற்றிய சர்வதேச கருத்தரங்கு 4ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து மடல் அனுப்பினார். ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை புதிய துவக்கமாகக் கொண்டு, நியாயம், திறப்பு, பன்முகம், புத்தாக்கம் ஆகியவை படைத்த வளர்ச்சிப் பாதையில் பன்னாடுகள் முன்னேறி, கூட்டு வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளில், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி சிந்தனையில் சீனா உறுதியாக உள்ளது. மக்களின் வளர்ச்சிக்கான உரிமை மற்றும் நலனை பயன்தரும் முறையில் உத்தரவாதம் செய்து, தனிச்சிறப்பு வாய்ந்த மனித உரிமை வளர்ச்சி பாதையை சீனா திறந்து வைத்துள்ளது என்று ஷீ ச்சின்பிங் இம்மடலில் சுட்டிக்காட்டினார். சர்வதேச நிர்வாகத்தில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, இணக்கமான வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, வளரும் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள் வளர்ச்சிப் பயன்களைக் கூட்டாக அனுபவிப்பதற்கு வாய்ப்புகளை வழங்கப் பாடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சீன அரசவை செய்தி அலுவலகமும் வெளியுறவு அமைச்சகமும் கூட்டாக நடத்திய இக்கருத்தரங்கில், 40க்கும் அதிகமான நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர்.