ஐ.நா தலைமை செயலாளர் பான் கீ மூன் 3ஆம் நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நிகழ்த்திய உரையில், மாற்றுத்திறனாளிகள் சமூக வளர்ச்சியில் பன்முகங்களிலும் ஒன்றிணைந்து, பயன்தரும் முறையில் பங்கெடுப்பதற்கு, சர்வதேச சமூகம் கூட்டாக பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
10 ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளின் உரிமை பொது ஒப்பந்தம் ஐ.நா பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த பொது ஒப்பந்தத்தின் தூண்டுதலுட், சமத்துவம், இணக்கம், உரிமை வழங்கும் வாக்குறுதி, செயல்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு நாடுகள் பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகள் பிரச்சினை, உலக மனித உரிமை மற்றும் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் நாளுக்கு நாள் ஒன்றிணைந்து வருகிறது என்று பான் கீ மூன் இவ்வுரையில் தெரிவித்தார்.
இவ்வாண்டு 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சியை ஐ.நா உறுப்பு நாடுகள் செயல்படுத்தும் துவக்க ஆண்டாகும். இந்நிகழ்ச்சி நிரலில் 17 ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ள தொடரவல்ல இலக்குகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நனவாக்க, மாற்றுத்திறனாளிகள் சமூக வளர்ச்சியில் பன்முகங்களிலும் ஒன்றிணைந்து, பங்கெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.