txcnd.mp4
|
சீனாவின் ஜியங்சி மாநிலத்தில் உள்ள ஜிங்தெசென் நகர், "பீங்கான் மாநகர்" என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு வருகிறது. 1900-களின் தொடக்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று வந்த இத்தொழிற்சாலை தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. தொடக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், தொன்மை வாயந்த பொருள்கள் அருங்காட்சியகத்துக்கள் ஒழுங்கமைவில் வைக்கப்பட்டுள்ளன. டாய்சீசுவன் என்ற இந்த இடம், சர்வதேச அளவிலான தொழிற்சாலையாக விளங்கி வந்துள்ளது. ஆதலால், தற்போது வெளிநாட்டு கலைஞர்கள் தங்களது நாட்டு கலை மற்றும் சிற்பங்களை இங்கு வடித்து வருகின்றனர்.
சீன மக்களையும் பீங்கானையும் பிரித்தறிய முடியாது என்பதால் பீங்கானுக்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது. அது, பல இளைஞர்களை இத்துறைக்கு ஈர்த்துள்ளது.
இன்றைய தினம் 3-12-2016 பீங்கான் கலை தொடர்பாக வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு வகுப்பும், அறிமுகமும் செய்யப்பட்டன. பீங்கானில் இன்று நாங்கள் தீட்டிய ஓவியம் இன்னும் சில நிலைகளைக் கடந்து இறுதியில் முழு வடிவம் பெறும்.