நண்பர்களே, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீங்ச்சி நகரின் அழகை குறித்து உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். முதலாவது, நீங்ச்சி நகரிலுள்ள மிகப் பெரிய திபெத் மரபுவழி புத்தமதக் கோயில் பூ ஜியூ லாமா லிங் பற்றி அறிமுகப்படுத்துகிறேன். இக்கோயில் முற்றிலும் மரம் மற்றும் மண்ணால் கட்டியமைக்கப்பட்டது. அது மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கோயிலின் வெளியே நதி பாய்ந்து ஓடுகிறது.
பூ ஜியூ லாமா லிங் கோயிலின் மண்டபத்துக்கு 20க்கும் மேலான மீட்டர் உயரமானது. அதன் மேலே தங்க கூரை உண்டு. நான்கு சுவர்கள் முறையே வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் பச்சையால் சாயம் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் உயிர்த்துடிப்புடனான சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகு மிக்கது.
மேலும், கோயிலின் அருகிலுள்ள சுற்றுச்சூழல் அமைதியானதும் அழகானதுமாகும். அங்கு பயணம் மேற்கொண்டால், பச்சைப் பசேல் என இருக்கும் மலைக் காட்சியைக் கண்டுரசிக்கலாம். மனத்தில் அமைதியையும் கொண்டு வரலாம்.