சீனா-ஜப்பான்-தென் கொரியா தடையில்லா வர்த்தக மண்டலம் பற்றி 11ஆவது பேச்சுவார்த்தை 11ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மூன்று நாடுகளும் இப்பேச்சுவார்த்தையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளன.
சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், உலகின் முதல் 10 வர்த்தக வல்லரசுகளில் இடம் பிடித்துள்ளன. ஆனால், இந்த மூன்று நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தொகை, அவற்றின் மொத்த வர்த்தகத் தொகையிலும் 20 விழுக்காடு மட்டும் வகிக்கிறது. இந்நிலையில் இந்த மூன்று நாடுகள் கூடியவிரைவில் தடையில்லா வர்த்தக உடன்படிக்கையை உருவாக்கினால், வர்த்தக அதிகரிப்பைத் தூண்டும் அதேவேளை, அதிகமான முதலீட்டு வாய்ப்புகளையும் பொருளாதார நலன்களையும் கொண்டு வரும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.