சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, குன்மிங் முதலிய 10 மாநகரங்களில் யோகா கல்வி மையமோ அல்லது கிளையோ சீன-இந்திய யோகா கல்லூரி அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதிலும் 50 கல்லூரி கிளைகளையும், 100 கல்வி மையங்களையும், சில யோகா பயிற்சி மையங்களையும் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த இலக்கிற்காக, சீன-இந்திய யோகா கல்லூரி, பெய்ஜிங் ஜீமெய்சென்மெய் முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து யுன்னான் மாநிலத் தலைநகர் குன்மிங்கில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சீன-இந்திய யோகா கல்லூரி 2015ம் ஆண்டு ஜுன் திங்களில் நிறுவப்பட்டது. இது, உலகளவில் சீனாவும் இந்தியாவும் கூட்டாக அமைத்த முதலாவது யோகா கல்லூரியாகும்.