சர்வதேச நாணய நிதியம் 16ஆம் நாள் வெளியிட்ட உலகப் பொருளாதார எதிர்காலம் பற்றிய அறிக்கையில், புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் தலைமையில், 2017ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார அதிகரிப்பு வேகம், கடந்த ஆண்டில் இருந்ததை விட, அதிகரிக்கும். இருப்பினும், பாதுகாப்புவாதம், இறுக்கமான உலக நிதி சூழ்நிலை முதலியவற்றை உலகப் பொருளாதாரம் தொடர்ந்து எதிர்நோக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில், உலகப் பொருளதார வளர்ச்சி, முறையே 3.4 விழுக்காடு மற்றும் 3.6 விழுக்காடு என அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொள்ளும் கொள்கைகள், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.