இந்தியாவுக்கான சீன தூதர் லோ ச்சொ ஹெய் 16ஆம் நாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவைச் சந்தித்துரையாடினார். சீன-இந்திய உறவு, பிரதேச ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
சீனாவின் மாநிலங்கள் மற்றும் மாநகரங்கள் ராஜஸ்தானுடன் நட்புப்பூர்வ நகர் உறவை உருவாக்குவதற்கும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்வது ஆகியவற்றை தூண்டுவதற்கும் சீன தூதரகம் விரும்புவதாக லோ ச்சொ ஹெய் கூறினார்.
வசுந் தர ராஜே கூறுகையில் சீன தொழில் நிறுவனங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். சீன சுற்றுலா பயணிகள் ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டு, இரு நாட்டு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஆழமாக்க வேண்டுமென ராஜே வருப்பம் தெரிவித்தார்.