இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள கேகாலை மாவட்டத்தில், சீன உதவியுடன் அமைக்கும் சீன-இலங்கை நட்புறவுக்கான அரநாயக்க கிராமத்தின் கட்டுமானம் திங்கள்கிழமை துவங்கியது. இதன் மூலம், கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்கள் குடியிருப்பு வசதியைப் பெறுவர்.
திட்டப்படி, இந்த நட்புறவு கிராமத்தில், மொத்தம் 100 வீடுகள் அமைக்கப்படும். ஓராண்டுக்காலம் நீடிக்கும் முதல் காலக்கட்ட பணி நிறைவடைந்த பின் 60 வீடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்படும்.