சீனாவில் புதிய அணு மின் நிலையங்களின் இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றும் சீனத் தேசிய பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் தொழிற்துறை பணியகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
உள் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியுடன், இப்பிரதேசத்தில் எரியாற்றலுக்கான தேவையும் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. தூய்மை, நிதானம், உயர் பயன் ஆகியவற்றைக் கொண்ட அணு மின் துறையை வளர்ப்பது தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. உலகில் 400க்கும் மேலான அணு மின் நிலையங்களில் பெரும்பாலானவை உள் பிரதேசத்தில் அமைந்துள்ளன.
தற்போது, ஹுனான், ஹுபெய், ச்சியாங்சி ஆகிய மாநிலங்களில் புதிய அணு மின் நிலையங்களைக் கட்டியமைக்கும் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.