சீன-இலங்கை தடையில்லா வர்த்தக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தை
2017-02-16 18:20:08 cri எழுத்தின் அளவு: A A A
இலங்கையுடன் சேர்ந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியின் கட்டுமானத்தை முன்னேற்றி, இரு நாட்டு தடையில்லா வர்த்தக மண்டலம் பற்றிய பேச்சுவாத்தையை விரைவுப்படுத்த சீனா விரும்புவதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுன் ச்சிவென் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக்க் கூட்டாளியாக சீனா மாறியது. இரு தரப்புகளின் முயற்சியுடன், இலங்கை தெற்காசியாவிலுள்ள சீனாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக மாறியது. இரு தரப்பு வர்த்தகத் தொகை 456 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டாலராகும்.
சீன-இலங்கை தடையில்லா வர்த்தக மண்டலம் பற்றிய பேச்சுவார்த்தை 2014ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடத்த துவங்கியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய