கடந்த சில ஆண்டில், சர்வதேச பயங்கரவாத அமைப்பு பிரதேச மோதலில் கலந்துகொண்டு, மத்திய கிழக்குப் பிரதேசம் உள்ளிட்ட பிரதேசங்களில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதோடு, சில வெளிப்புற சக்திகள் ரஷியா மீது ஆத்திரமூட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ரஷிய சமூகத்தின் நிதானத்தைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன. இந்நிலைமையில், ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு ஆணையமும் இதர பாதுகாப்பு வாரியங்களும் இந்நிலைமையில் உற்று கவனம் செலுத்தி, பயங்கரவாத நடவடிக்கையையும் சீர்குலைக்கும் நடவடிக்கையையும் முக்கியமாக ஒடுக்க வேண்டும் என்று புத்தின் குறிப்பிட்டார்.