சிரியா பிரச்சினைக்கான அஸ்தானா பேச்சுவார்த்தை 16ஆம் நாள் நிறைவுற்றது. ரஷியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் சிரியா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் முத்தரப்பு கூட்டு செயல் குழுவை நிறுவுவது தொடர்பான தீர்மானம் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஷிய பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் செர்கி வெர்ஷினின் வியாழக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
சிரியா அரசுக்கும் அரசு எதிர்ப்பு குழுவுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கி பேச்சுவார்த்தையை முன்னேற்றும் வகையில் நிறுவப்படும் முத்தரப்பு கூட்டு செயல் குழு நிரந்தர அமைப்பாக இயங்கும். போர் நிறுத்த உடன்படிக்கை செயல்படுத்தப்படும் நிலைமையையும், அரசு எதிர்ப்புக் குழு இவ்வுடன்படிக்கையை மீறியுள்ளதா என்பதையும் கண்காணிப்பது, அதன் பணிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.