இதன்மூலம் நீண்ட நாள்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் நிறைவுக்கு வந்தது. தனக்கு 124 சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பழனிச்சாமி தெரிவித்திருந்தார். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வார கால அவகாசத்தை ஆளுநர் அவருக்கு அளித்திருந்தார்.
ஆனால், அதிமுக செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சனிக்கிழமை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.
4 முறை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பழனிச்சாமி, கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா மறைந்த பிறகு, இரண்டாவது முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.