• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா கண்டனம்
  2017-02-17 18:37:06  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் தெற்கிலுள்ள சிந்து மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் கடும் உயிரிழப்பை உண்டாக்கியதை அறிந்து கொண்ட சீனா அதிர்ச்சி அடைந்து, இத்தாக்குதலுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் 17ஆம் நாள் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும், காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் சீனா தெரிவிக்கிறது என்று கூறினார். மேலும், எவ்வித பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மை, மக்களின் உயிர் மற்றும் உடைமையைப் பாதுகாக்கும் பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து உறுதியாக ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040