பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் மதசார்புடைய இடத்தில் 16ஆம் நாளிரவு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர். 200க்கு அதிகமானோர் காயமுற்றனார்.
காயமுற்றவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்றும், காயமடைந்தவர் மிக அதிகமாக இருப்பதால், சிலர் ஹெலிகப்டர் மூலம் ஹெதராபாத் மற்றும் கராச்சியிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் உள்ளூர் சுகாதார வாரியத்தின் அதிகாரிகள் கூறினர். மேலும் மீட்புதவிப் பணிக்கு ஆதரவு அளிக்குமாறு ராணுவத்துக்கு உள்ளூர் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில், பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. 13ஆம் நாள் லாகூர் நகரிலுள்ள ஒரு கூட்டத்தில் அந்நாட்டிலுள்ள தலிபான் இயக்கத்தின் கிளை தற்கொலைதன்மை வாய்ந்த தாக்குதலை நடத்தியது. இதில் தாக்குதல் நடத்தியவர் உள்பட 15 பேர் உயிர் இழந்தனர்.