புதிய சுற்று சீன-இந்திய நெடுநோக்கு பேச்சுவார்த்தை அடுத்த புதன்கிழமை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று சீன அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் அண்மையில் தெரிவித்தார்.
சீன துணை வெளியுறவு அமைச்சர் சாங் யே சுய், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மிக முக்கிய பரிமாற்ற மேடையாகும். அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, நெடுநோக்குத் துறையில் பொது கருத்துக்களை விரிவாக்கி, நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்புறவை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று விரும்புவதாக கெங்சுவாங் கூறினார்.