கோலாலம்பூர் 2ஆவது சர்வதேச விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட வட கொரிய நாட்டவர் விஎக்ஸ் நரம்பு நச்சு பொருளால் உயிரிந்தார் என்று மலோசிய காவற்துறையின் தலைவர் ஹலித் அபு பாகர் 24ஆம் நாள் அறிவித்தார்.
கிம் சோக் என்ற அடையாளம் கொண்ட இந்த நபர் 13ஆம் நாள் விமான நிலையத்தில் 2 பெண்களின் தாக்குதலுக்குள்ளானார். பிறகு அவர் காவற்துறையிடம் உதவி கேட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். அவர் வட கொரியாவின் அரசுத் தலைவர் கிம் செங் ஏன்னின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.