வட சிரியாவின் அல் பாப் நகரில் 24ஆம் நாள் வாகன வெடி குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தன. இத்தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
ஐ.எஸ் அதி தீவிர அமைப்பு இத்தாக்குதலைத் தொடுத்துள்ளது. அல் பாப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்த சுதந்திர சிரியா படை எனும் சிரயா அரசு எதிர்ப்பு அமைப்பைத் தாக்குவதென்பது, இத்தாக்குதலின் இலக்காகும். உயிரிழந்தோரில் உள்ளூர் அப்பாவி மக்கள் அதிகம் என்று துருக்கியின் அனதோலு செய்தி ஊடகம் தெரிவித்தது.
இதற்கு பின் அந்த கிராமத்தில் இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இது வரை எந்த தனிநபரோ அமைப்போ இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை என்று ஹுரியேட் எனும் துருக்கி செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
துருக்கி ராணுவ வட்டாரம் அன்று வெளியிட்ட அறிக்கையில், துருக்கியின் ஆதரவைப் பெற்றுள்ள சுதந்திர சிரியா படை, அல் பாப் நகரை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.