• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாதிகள் ஹோம்ஸ் தாக்குதலை உருவாக்கியதன் நோக்கம் பற்றி சிரியா அரசின் கருத்து
  2017-02-26 15:29:04  cri எழுத்தின் அளவு:  A A A   

அஸ்தானா அமைதி பேச்சுவார்த்தையில் பெற்றுள்ள ஆக்கப்பூர்வ சாதனைகளைச் சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் தொடர் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சிரியா வெளியுறவு அமைச்சகம் 25ஆம் நாள் தெரிவித்தது.

சிரியா வெளியுறவு அமைச்சகம் அன்று ஐ.நா தலைமைச் செயலாளர் மற்றும் பாதுகாப்பவைத் தலைவருக்கு அனுப்பிய மடலில், ஹோம்ஸ் நகரில் நிகழ்ந்த இத்தாக்குதலையும், சிரியாவில் நடத்தப்பட்ட இதர பயங்கரவாத தாக்குதல்களையும் ஐ.நா கண்டித்து, பன்னாடுகள் முயற்சி மேற்கொண்டு, பயங்கரவாதத்தை கூட்டாக ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

போர் நிறுத்தத்தை நனவாக்குமாறு சிரியாவின் பல்வேறு தரப்புகளுக்கும் வற்புறுத்தி, ஜெனிவா அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் செய்யும் வகையில், ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முயற்சியுடன், சிரியா பிரச்சினை தொடர்பான பல்வேறு தரப்புகள் இவ்வாண்டு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இரண்டு சுற்று அமைதி பேச்சுவார்த்தையை நடத்தின. இந்நிலையில் பிப்ரவரி 23ஆம் நாள் பத்து திங்கள்களாக துண்டிக்கப்பட்டிருந்த ஜெனிவா அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040